முக்கூடல் அமர்நாத் காலனி வடக்கு பகுதியில் ஏராளமான வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். இங்கு சாலை, தெருவிளக்கு, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் மழைக்காலத்தில் சேறும் சகதியுமான சாலையில் நடந்து செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.