திருப்பூர் அருகே வீரபாண்டி பகுதியில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகை செடிகளின் பிடியில் சிக்கி தவிக்கின்றது. புதிதாக வரும் எத்தனையோ ேபருக்கு ஊரை அடையாளம் காட்டி உதவிய பெயர்ப்பலகை தனக்கு யாரேனும் உதவ மாட்டார்களா என காத்திருக்கிறது. எனவே ஊர் பெயர் பலகையை மறைத்து நிற்கும் செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.