புதுக்கோட்டை பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகளுக்காக பஸ் நிலைய வளாகத்தில் இலவச சுகாதார வளாகம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சுகாதார வளாகம் முறையாக பராமரிக்கப்படாததால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகள் மூக்கை மூடிக்கொண்டு இந்த சுகாதார வளாகத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.