சிதிலமடைந்த சுற்றுச்சுவர்

Update: 2024-09-15 14:51 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல்- விராலிமலை சாலையில் அரசினர் மாணவர் விடுதி உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் மாணவர் விடுதியின் சுற்றுச்சுவர் மிகவும் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் அரசு மதுபானக்கடைக்கு செல்லும் வழியில் இந்த அரசினர் மாணவர் விடுதி உள்ளதால், பலர் மது போதையில் அந்த சுவற்றின் அடியில் படுத்து உறங்கும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்