வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-09-01 14:54 GMT

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு வாகனங்கள் அதிகமாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, போக்குவரத்து போலீசார் பெருயகாளையம் பகுதியில் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்த கனரக வாகனங்களை வெங்கல், சீத்தஞ்சேரி வழியாக திருப்பி விடுகின்றனர். இதனால் இந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே, இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்