மதுப்பிரியர்கள் அட்டகாசம்

Update: 2024-08-11 11:58 GMT

கோவை ரத்தினபுரி தயிர் இட்டேரி புது பாலம் அருகே மதுப்பிரியர்கள் கூட்டமாக அமர்ந்து மது குடிக்கின்றனர். போதை தலைக்கேறியதும் ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளை பேசி தகராறில் ஈடுபடுகின்றனர். இது அந்த வழியாக செல்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறது. அத்துடன் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. குறிப்பாக பெண்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே அங்கு மதுப்பிரியர்கள் அட்டகாசத்தை தடுக்க போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்