வேகத்தடை அகற்றப்படுமா?

Update: 2024-06-30 14:52 GMT
தியாகதுருகம் பேரூராட்சி அலுவலகம் அருகே காமராஜர் நகரில் உள்ள தார் சாலையில் தனிநபர்கள் சிலர் தங்களது வீடுகளுக்கு முன்பு அனுமதியின்றி அடுத்தடுத்து 4 வேகத்தடைகளை அமைத்துள்ளனர். இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் எதிர்பாராதவிதமாக வேகத்தடையில் சிக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே அனுமதியின்றி வைக்கப்பட்ட வேகத்தடையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்