அரசு மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு

Update: 2024-06-02 15:36 GMT

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சித்த மருத்துவ பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் சித்த மருத்துவ பிரிவில் போதுமான மருந்துகள் இல்லாததால் நோயாளிகள் எப்போது சென்றாலும் மருந்துகள் இல்லை என்று கூறுகின்றனர். மேலும் நாளை, நாளை மறுநாள் வாருங்கள் என்று அலைகழிக்கப்படுகின்றனர். இதனால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மருந்து தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்