விளம்பர பதாகைகளால் இடையூறு

Update: 2024-06-02 11:58 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஊரக சாலை முதல் நெடுஞ்சாலை பகுதிகள் வரை சாலையோர மரங்களில் ஆணி அடித்து விளம்பர பதாகைகள் வைக்கக்கூடாது என சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் தற்போது சாலையோரமுள்ள ஒரு சில மரங்களில் ஆணி அடித்து ஒரு சில விளம்பர நிறுவனங்கள் விளம்பர பதாகைகளை இன்னமும் வைத்து கொண்டுதான் உள்ளன. மேலும் ஒரு சில விளம்பர நிறுவனங்கள் இன்னும் கூடுதலாக, ஒரு படி மேலே போய் மின் கம்பங்களிலும் விளம்பர பதாகைகளை தாராளமாக விளம்பர பதாகைகளை தொங்கவிட்டு வருகின்றன. மின் வாரிய ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுக்கும் வகையில் இவ்வாறு மின் கம்பங்களில் விளம்பர பதாகைகளை தொங்க விடும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்