குரங்குகள் தொல்லை

Update: 2024-05-05 17:55 GMT
கள்ளக்குறிச்சி நகரில் நாளுக்கு நாள் குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. இவை அங்குள்ள கடைகளில் புகுந்து பொருட்களை சேதப்படுத்துவது மட்டுமின்றி விரட்ட வருபவர்களையும் கடிக்கப்பாய்கின்றன. இதனால் கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் கொண்டு விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்