பூங்காவை திறக்க கோரிக்கை

Update: 2024-04-28 12:57 GMT
புதுக்கோட்டை அசோக் நகர் அருகே தமிழ் நகரில் ரூ.45 லட்சம் செலவில் பூங்கா ஒன்று கட்டபட்டுள்ளது. தற்போது பூங்கா திறக்கப்படாமல் காட்சி பொருளாக உள்ளது. இதனால் அந்த பூங்காவில் செடி, செடிகள் வளர்ந்து முட்புதர்போல காட்சியளிக்கிறது. மேலும் அப்பகுதி உள்ள ஆடு, மாடுகள் பூங்காவிற்கு உள்ளே சென்று அங்குள்ள புற்களை தின்று வருகிறது. எனவே பூங்காவை சீரமைத்து பொதுமக்கள் திறந்து விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

மேலும் செய்திகள்