பொதுமக்கள் கோரிக்கை

Update: 2024-04-14 11:53 GMT

சென்னை மயிலாப்பூர், ரெயில் நிலையத்திற்கு பின்புறம் ஒரு மதுபானக்கடை உள்ளது. இந்த கடையில் குடிகாரர்கள் மதுவை வாங்கி வந்து, ரெயில் நிலையம் அருகே உள்ள சாலையில் அமர்ந்து குடிக்கிறார்கள். மேலும் காலி பாட்டில்களை நடு ரோட்டிலேயே வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே, போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்