ஆபத்தான கட்டிடம் அகற்றப்படுமா?

Update: 2024-03-24 17:54 GMT
தியாகதுருகம் கடைவீதி பஸ் நிறுத்தம் அருகே சுமார் 50 ஆண்டுகள் பழமையான கிராம சாவடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் பழுதடைந்ததால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல் பூட்டியே கிடக்கிறது. எப்போது வேண்டுமானாலும் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் கிராம சாவடி கட்டிடத்தை அகற்றிவிட்டு அங்கு பொதுமக்களுக்கு தேவைான அரசு கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்