ஆபத்தான நிலையில் பயணிகள் நிழற்கூடம்

Update: 2024-03-17 17:28 GMT
தியாகதுருகம் அருகே கொட்டையூர் கிராமத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை சிதிலமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக நிழற்குடையின் மேற்கூரையில் உள்ள சிமெண்டு காரைகள் அவ்வப்போது பெயர்ந்து கீழே விழுந்து வருகிறது. இதனால் பயணிகள் நிழற்குடை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதன் காரணமாக அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பெரும் அச்சத்துடனே இருக்கின்றனர். எனவே விபத்து ஏற்படும் முன் சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை அகற்றிவிட்டு அங்கு புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்