மதகு சரி செய்யப்படுமா?

Update: 2024-02-25 18:20 GMT
கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூாில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் உள்ள மதகு சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் அதன் வழியே தேவையின்றி தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதன் காரணமாக ஏரியில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாய பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே ஏரி மதகை உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்