மூடிகிடக்கும் காத்திருப்பு கூடம்

Update: 2024-01-28 17:22 GMT
பண்ருட்டி தாலுகா அலுவலகத்திற்கு அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவது உள்பட பல்வேறு காரணங்களுக்காக வரும் பொதுமக்களின் நலன் கருதி அங்கு காத்திருப்பு கூடம் கட்டப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இந்த காத்திருப்பு கூடம் கடந்த பல ஆண்டுகளாக பூட்டி கிடக்கிறது. தற்போது அந்த கூடம் மணல் கடத்தல் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை நிறுத்துமிடமாக மாறியுள்ளது. எனவே காத்திருப்பு கூடத்தை சீரமைத்து மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்