கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் திறக்கப்படுமா?

Update: 2024-01-21 15:34 GMT
பண்ருட்டி அருகே கோட்டலாம்பாக்கத்தில் புதிதாக கிராம நிர்வாக அலுவலகம் கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது. இருப்பினும் அதனை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் தற்போது பழுதடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் புதிய கட்டிடத்தை மது அருந்தும் கூடாரமாக சமூக விரோதிகள் மாற்றி வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்