நாய்கள் தொல்லை

Update: 2023-12-24 10:31 GMT

நாகை மாவட்டம் ஆதலையூர் கிராமத்தில் நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்பவர்களை துரத்தி சென்று கடிக்கின்றன. வாகனங்களில் வருபவர்களை விரட்டுவதால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வெளியே சென்று வரக்கூடிய நிலை உருவாகி உள்ளது. மேலும், வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு,கோழிகளையும் நாய்கள் வேட்டையாடுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்