ஆமை வேகத்தில் பாலம் கட்டுமான பணி

Update: 2023-12-10 13:45 GMT

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா புதுப்பள்ளி கிழக்கு பகுதியில் பாலம் கட்டும் பணி நடந்து வந்தது. இந்த பணி கடந்த சில நாட்களாக நடைபெறாமல் இருக்கிறது. மேலும், பாலப்பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மாணவ-மாணவிகள் மாற்று பாதையில் 4 கிலோ மீட்டர் சுற்றி வரும் நிலை உருவாகி உள்ளது. எனவே, வாகன ஓட்டிகள், மாணவ-மாணவிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் நடந்து வரும் பாலப்பணியை விரைந்து முடித்து பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்