பொதுமக்கள் அவதி

Update: 2023-12-03 13:05 GMT

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், செங்கல்பட்டு -காஞ்சீபுரம் நெடுஞ்சாலை அருகில் உள்ள ஆத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பொதுமக்கள் அதிகமாக வந்து செல்கின்றனர். ஆனால், சிறு மழை பெய்தாலே ஊராட்சி மன்ற அலுவலகம் வெளிப்பகுதியில் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதி வழியாக மக்கள் நடமாட மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தின் வெளிப்பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்