சாலையோர வாகனங்கள் அகற்றப்படுமா?

Update: 2023-12-03 13:03 GMT

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியில் இருந்து நெல்லிக்குப்பம், காயரம்பேடு செல்லும் சாலை ஓரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனத்தை நிறுத்தி வைக்கின்றனர். குறிப்பாக காயரம்பேடு கூட்டுசாலை பகுதி மற்றும் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் சாலையில் வாகனங்களை நிறுத்தி வைக்கப்படுவதால், மாணவர்கள் மற்றும் முதியவர்கள் கடும் சிரமப்பட்டு சாலையை கடந்து செல்கின்றனர். மேலும், வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்