தெருநாய்கள் தொல்லை

Update: 2023-12-03 11:45 GMT

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சாலைகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். பொன்னமராவதியில் அண்ணா சாலை, காந்தி சிலை, நகைக்கடை வீதி, நாட்டுக்கல் வீதி மற்றும் ஊராட்சி பகுதிகளிலும் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் தெருநாய்களால் விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும் தெருநாய்கள் கடித்து அவ்வப்போது பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்