திறந்து கிடக்கும் மின் பெட்டிகள்

Update: 2023-10-04 12:04 GMT

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள மேல் பூங்கா பகுதிக்கு செல்லும் வழியில் பல்வேறு இடங்களில் மின்சார பெட்டி மூடப்படாமல் திறந்து கிடக்கிறது. இதை அங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் தொடும்போது, மின்சாரம் தாக்கும் அபாயம் காணப்படுகிறது. குறிப்பாக குழந்தைகள் விளையாட்டுத்தனமாக அந்த பெட்டியை தொட முயற்சிப்பதால், உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே அங்குள்ள மின்சார பெட்டிகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்