விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக காணப்படுவது கண்மாய் பாசனமே. மாவட்டத்தில் பல கண்மாய் தற்போது பெய்த மழையின் காரணமாக நிறைந்துள்ளன. சில கண்மாய்களில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இதனால் கண்மாயில் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே கண்மாயை ஆக்கிரமித்த கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.