போளூர் தாலுகா மகாதேவிமங்கலம் கிராமத்தில் கல்குவாரி இயங்கி வருகிறது. அதில் கற்களை உடைக்க துளையிட்டு வெடி வைப்பதால், அருகில் கிராமத்தில் உள்ள வீடுகள் பாதிக்கப்படுகின்றன. நிலநடுக்கம் போல் அதிர்வுகள் ஏற்படுகிறது. வீட்டுக்கு சுவர் விரிசல் ஏற்படுகின்றன. கனிம வளத்துறை அதிகாரிகள் நேரில் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ், மகாதேவிமங்கலம்.