திறக்கப்படாத திருவள்ளுவர் மன்ற படிப்பகம்

Update: 2022-08-14 13:21 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் மேற்கு பகுதியில் சுதந்திர போராட்ட காலத்தில் தொடங்கப்பட்ட திருவள்ளுவர் மன்றம் தொடர்ந்து படிப்பகமாக செயல்பட்டு வந்தது. அதனால் அந்தப் பகுதிக்கு திருவள்ளுவர் மன்றம் என்றே பெயராக உள்ளது. ஆனால் அங்கு உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் மன்றம் படிப்பகம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடமாக கட்டப்பட்டு இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது. ஆகவே திருவள்ளுவர் மன்றம் படிப்பகத்தை திறந்து தினசரி பத்திரிக்கைகள் போட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்