சிதிலமடைந்த பள்ளி கட்டிடம்

Update: 2023-09-10 11:35 GMT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், கவரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் கடந்த ஆண்டு அடித்த கஜா புயலில் சேதம் அடைந்தது. தற்போது வரை இந்த கட்டிடம் சீரமைக்கப்படாமல் உள்ளது. மேலும் சிதிலமடைந்து காணப்படுவதினால் இதன் அருகே பள்ளி மாணவ-மாணவிகள் செல்லும்போது இந்த கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்