கொசு மருந்து அடிக்கப்படுமா?

Update: 2022-09-07 14:06 GMT


மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் விளநகர் கிராமத்தில் கொசுக்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் கொசுத்தொல்லையால் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்த செம்பனார் கோவில் பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், விளநகர்.

மேலும் செய்திகள்