காவிரி கரையோரம் தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை

Update: 2022-09-03 12:56 GMT

கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையம் பகுதியில் அவ்வப்போது காவிரி ஆற்றில் வெள்ளம் வரும்போது காவிரி ஆற்று அருகில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து தொடர்ந்து அங்கு குடியிருப்போர் பாதிப்படைந்து வருகின்றனர். குடியிருப்பு வீடுகள் உள்ள காவிரி கரையோரம் தடுப்புச்சுவர் அமைத்து வெள்ளநீர் ஊருக்குள் புகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் குடியிருப்போர் பல ஆண்டுகளாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த 2 தினங்களுக்கு முன் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய போது அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. பாதிக்கப்பட்டவர்களை முகாமில் தங்க வைத்து அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வந்தன. எனவே தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து காவிரி கரையோரம் தடுப்புச்சுவர் அமைத்து காவிரி ஆற்றின் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்