தெருநாய்கள் தொல்லை

Update: 2022-08-24 14:16 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணாநகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் வெளியே வர மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்களின் மீது தெருநாய்கள் மோதுவதால் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்