நாய்கள் தொல்லை

Update: 2022-08-21 15:26 GMT


மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சி பகுதியான தரங்கம்பாடி, பொறையாறு போன்ற பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தரங்கம்பாடி

===================

மேலும் செய்திகள்