மயிலாடுதுறை பட்டமங்கலம் ஊராட்சி சீனிவாசபுரம் பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை கடித்து விடுகின்றன. மேலும் தனியாக செல்லும் சிறுவர்களை கடித்து விடுகின்றன. இதனால் பொதுமக்கள்பெரிதும் சிரமப்படுகின்றனர். நாய்கள் சாலையில் செல்வதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
பொதுமக்கள் , மயிலாடுதுறை.