மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஈசானிய தெருவில் நகர ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. தற்போது இந்த கட்டிடம் சேதம் அடைந்ததால் இங்கு செயல்பட்டு வந்த நகர ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் ஈசானிய தெருவிலேயே நகர ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பொதுமக்கள்- சீர்காழி