பங்களா குளம் மேம்படுத்தபடுமா?

Update: 2022-08-19 13:52 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியின் மையப்பகுதியில் பஸ் நிலையம் அருகே பேரூராட்சிக்கு சொந்தமான பங்களா குளம் உள்ளது. மன்னர் காலத்தில் நல்ல கட்டமைப்புடன் உருவாக்கப்பட்ட இந்த குளம் நகரப் பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. ஆனால் இந்த குளத்திற்கு வரும் வரத்து வாய்க்கால்கள் அடைக்கப்பட்டு இருப்பதால் நல்ல மழை பெய்தாலும் குளம் நிரம்புவது இல்லை. மேலும் இந்த குளம் பராமரிப்பு இன்றி உள்ளது. எனவே குளத்தின் நான்கு கரைகளையும் பலப்படுத்தி கம்பிவேலி அமைக்க வேண்டும். மேலும் நடைபாதை தளம் அமைத்து நடைபயிற்சி செய்யவும், பூஞ்செடிகள் அமைத்து பொழுதுபோக்கு பூங்கா உருவாக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்