புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலமத்தில் உள்ள காந்திஜி சாலையில் 200-க்கும் மேற்ப்பட்ட கடைகள் உள்ளது. இதனால் எப்போதுமே இந்த சாலை போக்குவரத்து நெரிசலான சாலையாக உள்ளது. இந்தநிலையில் சாலையில் மண், மணல், செங்கல் வைத்தும், கடைகளை முன்னால் இழுத்தும் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் தால் காலை நேரத்தில் இந்சாலையில் அதிகளவு நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், விவசாயிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.