மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள நகராட்சி மீன் மார்க்கெட்டில் கழிவறை வசதி இல்லாமல் விற்பனையாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மீன் கழிவுகளையும் அப்புறப்படுத்த தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் மீன் மார்க்கெட் வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மயிலாடுதுறை நகராட்சி மீன் மார்க்கெட்டில் கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மயிலாடுதுறை.