அரியலூர் நகராட்சி அலுவலகம் செல்லும் பாதையில் கற்கள் பதியப்பட்டுள்ளன. இந்த கற்கள் ஆங்காங்கே பெயர்ந்து காணப்படுவதினால் வாகன ஓட்டிகளும், நகராட்சி அலுவலகத்திற்கு நடந்து வரும் பொதுமக்களும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பாதையில் பெயர்ந்துள்ள கற்களை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.