பன்றிகள் தொல்லை

Update: 2022-08-13 15:32 GMT


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதிக்கு உட்பட்ட புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ரெயில்வே ரோடு, சிதம்பரம் சாலை போன்ற இடங்களில் ஏராளமான பன்றிகள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. மேலும் அருகில் வீடுகளில் வளர்க்கப்படும், காய்கறி செடிகளை சேதப்படுத்தி விடுகின்றன. சாலைகளில் சுற்றித்திரியும் பன்றிகளால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், சீர்காழி

மேலும் செய்திகள்