புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு புள்ளாச்சி குடியிருப்பு அருகே விவசாயிகளின் பயன்பாட்டிற்காக தானிய உலர் களம் அமைக்கப்பட்டுள்ளது. தானியங்களை உலர்த்த அமைக்கப்பட்ட இந்த உலர் களமானது காலப்போக்கில் பராமரிப்பின்றி தற்போது சிதிலமடைந்து அவற்றை சுற்றி புதர் மண்டியுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.