புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு தெற்குப்பட்டியில் உள்ள அங்கன்வாடி குழந்தைகள் நல மையத்தில் உள்ள குழந்தைகள் கழிவறை பயன்பாடின்றி பாழடைந்த நிலையில் இருந்து வருகிறது. இதனால் குழந்தைகள் அவதியடைகின்றனர். எனவே இந்த கழிவறையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.