செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, ஆதனூர் பகுதியில் உள்ள பாலாஜி நகரில் குடியிருப்பு பகுதிகளை சுற்றி கருவேலமரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இதனால் இந்த பகுதியில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பணி முடிந்து இரவு நேரத்தில் வீடு திரும்பும் மகக்ள் இந்த பகுதியை கடந்து செல்லவே அச்சப்படுகிறார்கள். சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அடர்ந்து வளர்ந்துள்ள கருவேலமரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.