நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு

Update: 2022-07-28 13:01 GMT

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளங்கள் மற்றும் ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் இப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் ஆண்டுக்கு, ஆண்டு சுறுங்கி வருகிறது. மேலும் நீர் நிலைகளுக்கு செல்லும் வரத்து வாரிகளும் தூர்ந்துபோன நிலையிலும், ஒரு சில இடங்களில் வரத்து வாரிகள் இருந்ததற்கான அடையாளம் கூட இல்லாமலும் காணப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிப்பதுடன் பொதுமக்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்