புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே உள்ள குப்பையன்பட்டி கிராம ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கீழே விழுந்த நிலையில், கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் அச்சத்துடனே ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் பழுதடைந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் மேற்கூரையில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்த பகுதிகளை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.