புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடிவழி தடத்தில் இரவு நேரத்தில் இயக்கப்படும் பஸ்கள் கடந்த சில மாதங்களாக இயக்கபடாதது குறித்தும், இதனால் மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பயணிகள் பாதிக்கப்படுவது குறித்தும் தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து தற்போது கறம்பக்குடி வழிதடத்தில் இயக்கபடாமல் இருந்த பஸ்கள் இரவு நேரத்தில் இயங்க தொடங்கி உள்ளன. பொதுமக்களின் நலன் கருதி செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.