புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு தெற்குப்பட்டியில் சேதமடைந்த நிலையில் இருந்து வரும் மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இச்செய்தி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரம் செய்யப்பட்டு இருந்தது. இதன் எதிரொலியாக வடகாடு மின் வாரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றி அதற்கு பதிலாக புதிய மின் கம்பத்தை மாற்றி அமைத்தனர். இதற்கு வடகாடு பகுதி பொதுமக்கள் விரைந்து நடவடிக்கை எடுத்த மின் வாரிய அலுவலர்களுக்கும், செய்தி பிரசுரம் செய்த 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கும் நன்றி தெரிவித்தனர்.