சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள மின்தூக்கி பழுதடைந்த நிலையில் உள்ளது. மேலும், பயணிகளுக்கு குடிநீர், கழிப்பறை மற்றும் இருக்கை போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. இதனால், பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, ரெயில்வே நிா்வாகம் பயணிகளுக்கு தேவையான வசதியை செய்ய நடவடிக்கை எடுக்குமா?