புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2023-09-13 11:39 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் மெயின் ரோட்டில் கடந்த பல ஆண்டுகளாக செயல்படாமல் முன்னாள் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், அங்கன்வாடி மையம் அருகே முற்புதர்கள் மண்டி ஆபத்தான நிலையில் இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, ஆபத்தான நிலையில் இருந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தினர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.  

மேலும் செய்திகள்