செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்கம் வட்டம் எலப்பாக்கம் கிராமத்தில் குரங்குகள் தொல்லை அதிகரித்துக்கொண்டே வருகிறது. வீடுகளில் கதவுகளை திறந்து வைத்தால் குரங்குகள் உள்ளே புகுந்து காய்கறி மற்றும் பழங்களை தூக்கி சென்று விடுகிறது. தெருவில் யாரேனும் நடந்து சென்றால் அவர்களை துரத்துவது போன்ற சம்பவங்களும் அரங்கேறுகிறது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குரங்குகளிடமிருந்து மக்களை காப்பாற்ற வழி செய்ய வேண்டும்.