இடிக்கப்பட வேண்டிய கட்டிடம்

Update: 2023-09-03 11:54 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்காக கட்டப்பட்ட கட்டிடங்கள் பல ஆண்டுகள் ஆனதால் சிதலமடைந்து காணப்படுகிறது. இதையடுத்து தற்போது நாடக மேடையின் பின்புறம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஏற்கனவே செயல்பட்டு வந்த கட்டிடம் தற்போது பயன்பாடு இல்லாமல் உள்ளதால் இந்த கட்டிடத்தில் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்து காணப்படும் கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்