சென்னை மடிப்பாக்கம், திருமுருகன் தெருவில் மழைநீர் வடிகால்வாய் பணிகள் கிடப்பில் போடபட்டு கடந்த ஒரு மாதமாக எந்த பணியும் நடைபெறவில்லை. இதனால், மழைநீர் வடிகால்வாயில் தேங்கி இருக்கும் கழிவுநீரால் கொசுகள் உற்பத்தி ஆகி அப்பகுதி மக்கள் டெங்கு, மலேரியா போன்ற நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வாகனங்களும் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கின்றது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழைநீர் வடிகால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.